Skip to content
Home » டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

டெல்டாவில் தூர்வாரும் பணி, முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதி ஆய்வு செய்கிறார்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12 ம் தேதிக்கு முன்பாகவே கூட  திறக்கப்படும். சில நேரங்களில் காலதாமதாகவும் திறக்கப்படும்.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வந்ததால் வழக்கம் போல் ஜூன் 12 ம் தேதி அணை  திறக்கப்பட்டு விடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

விவசாயிகள் எதிர்பார்த்தபடி ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று  நீர்பாசனத்துறை  தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்க உள்ளார். இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக, தஞ்சை, திருவாரூர், மாவட்டங்களில்  தூர்வாரும் பணிகளை ஜூன் 6-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!