Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையையொட்டி… டிரோன்கள் பறக்க தடை…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (06.10.2023) காலை சுமார் 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்லவுள்ளதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (06.10.2023) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் நாளை(06.10.2023) மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு
திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து சென்னை செல்லவுள்ளதால் மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது. எனவே நாளை (06.10.2023) தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!