தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனை ஆதரித்து இன்று பரப்புரையில் ஈடுபட உள்ளார்.தேனியில் இன்று காலை நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். பெண்கள், குழந்தைகள் , பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் முதல்வருடன் கைகுலுக்கி, செல்பி எடுத்தனர்.
பெண்கள் உதயசூரியனுக்கே வாக்களிப்போம் என முதல்வரிடம் தெரிவித்தனர்.