தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். சேக் அப்துல் ரகுமான் ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவின் குமார், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுருபிரபாகரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரதாப், சென்னை உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி வளர்ச்சி திட்ட இணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.