தூத்துக்குடியை சார்ந்த ரவி பகதூர் என்பவர் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த குடுகுடுத்தானூரில் மணி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாத காலமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சி வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் இந்த குடோனை சோதனை செய்துள்ளனர். பிறகு அதனை பூட்டி சீல் வைத்து விட்டு பாதுகாப்பிற்காக அலுவலர்களை விட்டு சென்று
விட்டனர். இன்று காலை தூத்துக்குடியில் இருந்து ரவி வந்த பிறகு குடோனை திறந்த சோதனை நடத்த இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ரவி பகதூர் வெளி நாடுகளில் இருந்து ஜவுளி துணிகளை இறக்குமதி செய்து கரூரில் உள்ள ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் என சொல்லப்படும் நிலையில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.