Skip to content
Home » திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அந்த வகையில் ஜீயபுரம் காவல் நிலைய போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில்,  அப்பகுதியில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து விநியோகித்து வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து, தாயனூர் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி(21), கர்ணன் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!