Skip to content
Home » தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர். ரிகா காவல் நிலையப் பகுதியில் உள்ள ராம்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அபிஷேக் ஜா என்ற நபர், தனியார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றி வருவது வழக்கம். இந்த ஆண்டும் அபிஷேக் தேசியக் கொடியேற்ற சென்றபோது, இரும்புக் கொடிக் கம்பத்தில் 11,000 வோல்ட் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சதார்  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!