Skip to content
Home » மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருடைய தாய் இறந்த பிறகு, இவரை 2015ம் ஆண்டு முதல் இவரது தந்தை பாலியல் வல்லுறவு செய்து வந்துள்ளார். இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீசில் புகாா் செய்தனா்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அச்சிறுமியின் தந்தையை 2019ம் ஆண்டில் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து, சிறுமியின் தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.  மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!