Skip to content
Home » திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

  • by Senthil

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அதன்படி  திருச்சி திருச்சி  மாநகர  சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர்(வடக்கு) வி. அன்பு, சென்னை  ரயில்வே போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர்  உதவி  கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா  , சூப்பிரெண்டாக உயர்வு பெற்று திருச்சி  வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிபிசிஐடி   சிறப்பு புலனாய்வு  ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டார். அவர்  வண்டலூர் ஊனமாஞ்சேரி  தமிழ்நாடு போலீஸ் அகாடமியின்  கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

அரக்கோணம்  உதவி போலீஸ் சூப்பிரெண்ட்  யாதவ் கிரிஷ் அசோக்  பதவி உயர்வு பெற்று  திருப்பூர்  தெற்கு சட்டம் ஒழுங்கு  துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அந்த இடத்தில் இருந்த  வனிதா சென்னை கட்டுப்பாட்டு அறை போலீஸ் எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையும்  உதவி போலீஸ் சூப்பிரேண்டு மதுகுமாரி பதவி உயர்வு பெற்று  போலீஸ் சூப்பிரெண்டாக  மதுரை வடக்கு  சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரேண்டு ஆர். ஸ்டாலின் பதவி உயர்வு பெற்று  கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!