Skip to content
Home » டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை ஆதரித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

டில்லியில் போராடும் மல்யுத்த வீரர்களை ஆதரித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

ATYF சாஷி மாலிக் வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் மல்யுத்த போட்டிகளில் பல்வேறு உலக நாடுகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்கள் . தற்போது 23.04.2023 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர் . மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரிஜ் பூசன் சான்சிங்கை கைது செய்ய கோரியும் 40 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள அவரது MP பதவியை தகுதி இழக்க சுப்ரீம் கோர்ட் தலையிட கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இணைந்து கண்டன ஆர்பாட்டம் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில்

நடைபெற்றது இதில் P.மாரியம்மாள் ( NFIN ஒன்றிய செயலாளர் M. சிவசங்கரன் ( AIYF ஒன்றிய பொறுப்பாளர் தலைமையில் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் செ.ராஜ்குமார் ( CPI ) மாவட்ட செயலாளர் புறநகர் K. பழனி சாமி ( CPI ஒன்றிய செயலாளர் ) S. ஜெயகுமாரி ( NFIF மாவட்ட செயலாளர் ) M. தமிழரசன் AIYF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S. மருதம்பாள் ஒன்றிய தலைவர் M. புவனா ஒன்றிய பொருளாளர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் NFIW அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் AIYF திருவெறும்பூர் ஒன்றியம் திருச்சி புறநகர் மாவட்டம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!