Skip to content
Home » சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு முக்கியம்…. புத்தாண்டு விழாவில் பிரதமர் பேச்சு

சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு முக்கியம்…. புத்தாண்டு விழாவில் பிரதமர் பேச்சு

தமிழ் புத்தாண்டு விழா  இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன்,  வீட்டில் தமிழ் புத்தாண்டு விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி, கவர்னர்கள் தமிழிசை, ராதாகிருஷ்ணன்,  முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்த  விழாவில் பட்டு வேட்டி,  ஜிப்பா அணிந்து பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன… உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம். காமராஜர், ராஜாஜி போன்றோர் தமிழகத்தில்  பிறந்த சாதனையாளர்கள்.

பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன. பலமுறை பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கி உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். ஏராளமானோர் குறுஞ்செய்தி மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!