Skip to content
Home » குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

  • by Senthil

திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும் இருந்தனர். ஈஸ்வரனின் தாய் செல்லாயி இவர்களுடன் வசித்து வந்தார்.

குடிப்பழக்கத்திற்கு ஆளான ஈஸ்வரன் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை தாய் செல்லாயி தட்டிக் கேட்டுள்ளார். இரவு முழுவதும் இந்த சண்டை தொடர்ந்திருக்கிறது.  விடிகாலை  2 மணியளவில் வீட்டில் இருந்த அரிவாளை  எடுத்து மனைவியை வெட்ட ஈஸ்வரன் பாய்ந்திருக்கிறார்.

செல்லாயி
அதைத் தடுக்க ஓடி வந்த தனது தாயைக் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த செல்லாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாட்டியைத் வெட்டுவதைத் தடுக்க ஓடி வந்த மகள்  நதியாவையும் இரக்கமில்லாமல் வெட்டியுள்ளார். இதில் அவரது வலது கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தவர்,  அருகில் இருந்த வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 80 வயதான முதியவர்  பெரியனாண்டி அம்பலம் என்பவரையும் ஈஸ்வரன் வெட்டியுள்ளார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் போலீஸார்,  இறந்தவர்களின் உடல்களை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ஈஸ்வரனை கைது செய்துள்ளனர். போதை ஆசாமியின்  இந்த செயல் அப்பகுதியில்  பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!