பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திருச்சி- முசிறி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொட்டியம் ஒன்றியம், அரங்கூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் நேரில் சென்று அமைச்சர் கே.என்.நேரு வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலாளர்
எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உடனிருந்தார். இதில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இந்தியா கூட்டணியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.