Skip to content
Home » சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

சுத்தம் இல்லாமல் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் குடிக்கச் சொன்ன பொதுமக்கள் … பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம் 21வது வார்டு அப்பகுதியில் ஒரு மாதம் கழித்து காவேரி குடிநீர் வழங்கப்பட்டது அந்த குடிநீர் சுத்தமில்லாமல் கழிவு நீராக மாறி களங்களாக வந்ததால் பொதுமக்கள் சாக்கடையுடன் கலந்து வரும் குடிநீரை குடத்தில் எடுத்துக் கொண்டு துறைமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடத்தில் இருந்த குடிநீரை தமிழர் எடுத்து இதை குடித்து பாருங்கள் அப்போதுதான் எங்கள் வேதனையை உங்களுக்கு புரியும் என்று தண்ணீரைக் குடிக்க சொன்ன பொதுமக்கள் பல

மாதங்களாக நகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இதே போன்று தான் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் . எனவே சுத்தமான குடிநீர் வரும் வரை சாலை மறியலில் கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்து சாலை மறியலை கைவிட மறுத்த பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!