அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா கலந்துகொண்டு 5 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா சந்தித்து வாழத்துப்பெற்றார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் மற்றும் பலர் உடனிருந்தனர்.