Skip to content
Home » அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் பொன்முடியுடன்….. மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு 8 மணி முதல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது.  இந்த விசாரணை இன்று அதிகாலை 3 மணிக்கு முடிந்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடி வீட்டுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கணேசன்  ஆகியோர் வந்தனர்.  அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!