Skip to content
Home » எடப்பாடியின் அதிகாரபோதையால் தான் அதிமுக தோற்றது… ஓபிஎஸ் பேச்சு…

எடப்பாடியின் அதிகாரபோதையால் தான் அதிமுக தோற்றது… ஓபிஎஸ் பேச்சு…

  • by Senthil

முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், jct பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா துவங்குவதற்கு முன்பாக ஜமாப், செண்டை மேள கலைஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓ பன்னீர்செல்வம் பேசும்போது… எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோற்றது எனவும், அதிமுக இயக்கம் தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள். உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பதற்காக மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம், தனிக்கட்சி தொடங்கப்

போவதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி இடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க போவதாகவும், எந்த காலத்திலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றும், வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பாக தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறக்கத்தான் செல்ல வேண்டும்என்றும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்து மீண்டும் நரேந்திர மோடி அவர்களை பிரதமராக போவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!