சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது… தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தெரியும். எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அ.தி.மு.க. தெய்வ சக்தி உள்ள கட்சி; அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அ.தி.மு.க.வை சீண்டி பார்க்காதீர்கள்; அப்படி பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அ.தி.மு.க. என்றைக்கும் பயப்படாது. அ.தி.மு.க.வை அழித்த நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கி கொண்டு அலைகின்றனர் என்றார் எடப்பாடிபழனிச்சாமி. இன்றைய தினம் தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக எடப்பாடியிடம் இருக்காது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது..