தூத்துக்குடி நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 500 யூனிட்டுக்கு கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்துவிட்டு, சத்தமில்லாமல் மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாகச் சாடினார். மேலும், தமிழகம் எங்கும் தொடர் மின்வெட்டு சாதாரண நிகழ்வாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
