Skip to content
Home » தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் தஞ்சை அருகே மாதாக்கோட்டை சாலையில் சுப்பிரமணியன் கிளீனிக் வைத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர் பார்மசி முடித்துவிட்டு தனக்கு இருந்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சிலருக்கு சிகிச்சையும் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக பல புகார்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அவர் மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளீனிக் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியன் நடத்தி வந்த கிளீனிக்கை போலீசார் இழுத்து பூட்டினர். மேலும் மருத்துவப்படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததாக சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!