Skip to content
Home » விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் உரம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினர்.

மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவிப்பின்படி விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ன் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் 100 சதவீதம்

மானியத்தில் உரம் பெறுவதற்கான ஆணைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில்
மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி ஜெயராணி,வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி, மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்த், பாபு, பன்னீர்செல்வம், கதிரேசன் மற்றும் பாஸ்கர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!