Skip to content
Home » 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…….போக்சோவில் 4 பேர் கைது

  • by Senthil

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி(சிறுமி) செஞ்சியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.  கடந்த சில நாட்களாக பள்ளி மாணவியின் வயிறு வீக்கமாக இருந்த நிலையில் மாணவிக்கு வயிறு வலி அதிகமாக இருந்துள்ளது. இதனை அடுத்து பள்ளி மாணவியை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

செஞ்சி டிஎஸ்பி கவினா தலைமையிலான அனைத்து மகளிர் போலீசார் மேற்க்கொண்ட தீவிர விசாரணையில் பள்ளி மாணவிடம்(சிறுமியிடம்) ஆசை வார்த்தை கூறி அவரை மயக்கி 5 பேர் உல்லாசம் அனுபவித்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விஷ்ணு(21), மோகன்ராஜ்(23), பிரதீப்(23) மற்றும் சேரானுர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(28),துரை (38)ஆகிய ஐந்து பேர் மீதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான விஷ்ணு வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதால் மற்ற 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை(சிறுமியை) முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பள்ளி மாணவியுடன் 5 பேர் உல்லாசம் அனுபவித்து மாணவியை 6 மாத கர்ப்பமாக்கிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!