Skip to content
Home » உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

கேரளாவில் கோழிக்கோடு விமான  நிலையத்திற்கு  துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இதில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஹலா (19) என்ற இளம்பெண்  பயணம் செய்தார். இவர் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனை முடிந்து  வெளியே வந்தார். ஏற்கனவே ஷஹலா தங்கம் கடத்தி வருவதாக கூறப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் வெளியே காத்துக் கொண்டிருந்த கோழிக்கோடு கரிப்பூர்  போலீசார் அவரை உடனடியாக பிடித்து விசாரணை நடத்தினர்.   பல  மணி நேரம் விசாரணை  நடத்தியும்  அவரிடமிருந்து போலீசாரால் எந்த தகவலையும்  பெற முடியவில்லை. இறுதியில் அவரிடம் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் உள்ளாடைக்குள் மிகவும் நூதனமான முறை யில் 3 பாக்கெட்டுகள்  தைக்கப்பட்டு அதில் 1.880 கிலோ தங்கம் இருந்தது. அதன்  மதிப்பு ரூ.1 கோடியாகும். இதையடுத்து போலீசார் ஷஹலாவை கைது செய்து தீவிர  விசாரணை நடத்தினர்.  தன் கணவன் வற்புறுத்தியதால் தான் தங்கத்தை கடத்தி வந்ததாக ஷஹலா போலீசில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!