Skip to content
Home » மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(73). இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், நாராயணி கழுத்திலிருந்த  3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு, தப்பி ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நேற்று காலை மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!