திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி, காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால். இவர் தனது 3குழந்தைகளையும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். இதில் இக்பாலின் மூத்த மகன் மூக அறிவியல் பாடத்தில் குறைவாக மார்க் எடுத்ததால் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் மாணவரை பலமாக அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவனை அவரது வீட்டிற்கு சந்திக்க வரும் மாணவர்களின் நண்பர்கள், ‘இந்த ஆசிரியர் அடிப்பாரா?’ என அவ்வீட்டில் இருந்தவர்கள் கேட்டதற்கு, “ஒரு கேள்விக்கு பதில் தப்பாக சொன்னால் கூட 25 அடி அடிப்பார்” என சிறுவர்கள் தெரிவிக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.