Skip to content
Home » பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

பீகார் ஓட்டலில் பயங்கர தீ….. 6 பேர் பலி

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில்  இன்று காலை 11 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 3 பேர்  அங்கேயே உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 3 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை  6 ஆனது. உயிரிழந்த6  பேர் யார் என்பது குறித்த அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!