Skip to content
Home » கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர்  கீழமாந்தூரை சேர்ந்தவர் பாரதி(42), சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பாரதி மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த  சதீஷ்குமார் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதல் ஆனது. இருவரும்  வெளியிடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தனர்.

பின்னர்நள்ளிரவில்  சதீஷ்குமார், திவ்யாவின் வீட்டுக்கே வந்து உல்லாசம் அனுபவிக்கும் அளவுக்கு கள்ளக்காதல் முற்றிப்போனது. இதை ஒருமுறை குழந்தைகள் பார்த்து விட்டது. இது குறித்து குழந்தைகள்  தாயிடம் கேட்டு உள்ளது. ஆனால் அவர் சாக்குபோக்கு சொல்லி வந்தார்.

கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்து தானே ஆக வேண்டும் , கள்ளக்காதல் முற்றினால் பஞ்சாயத்துக்கு வந்து தானே ஆக வேண்டும் என்பது போல  இந்த கள்ளக்காதல் விவகாரம் ஊர் முழுவதும் பரவியது. இதை அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள பாரதிக்கு தெரிவித்தனர்.

இதனால் அவர் ஊருக்கு வந்து தங்கினார். இதுபற்றி மனைவியிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் அப்படி எந்த தொடர்பும் கிடையாது. அவன் எனக்கு தம்பி மாதிரி என்று கூறினாராம். ஆனாலும் பாரதி விடவில்லை. மனைவியை கண்டித்து உள்ளார்.  சென்னைக்கு இனி செல்ல வேண்டாம் , இங்கேயே ஏதாவது கூலி வேலை பார்க்கலாம் என வீட்டில் இருந்து கொண்டார்.

கள்ளக்காதலில் ருசி கண்ட திவ்யாவும், சதீஷ்குமாரும் இதனால்  பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  பாரதியை தீர்த்து கட்டினால் தான் இனி நாம் ஜாலியாக இருக்க முடியும் என அவர்கள் போனில் பேசி முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற  பாரதி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கடந்த 15ம் தேதி திவ்யா, பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன் கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டிருந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார்  பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தனர். அப்போது திவ்யா, சதீஷ்குமார் தொடர்பு பற்றி ஊர் மக்கள் புட்டு புட்டு வைத்தனர்.

அதன்பேரில் இருவரையும் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். விசாரணையில்,  பாரதியை இருவரும் சேர்ந்து கொன்று புதைத்து விட்டதாக கூறினர். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இன்று பாரதி சடலத்தை போலீசார் தோண்டி எடுக்கிறார்கள். இதற்காக வருவாயத்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.  இந்த சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பரபரப்புடன் பேசப்படுகிறது.  கள்ளக்காதலன் சதீஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. குழந்தைகள் இல்லை.

பாரதி கொலை செய்யப்பட்டு விட்டார்.  திவ்யாவும் சிறைக்கு செல்லும் நிலையில் அவர்களது இரண்டு குழந்தைகளும் பெற்றோர் இன்றி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!