18வது மக்களவைக்கான தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. ஆனால் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கவில்லை என்ற குற்றசாட்டு எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மேலும் பாஜக கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் மத பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இது இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைக்கு முற்றிலும் எதிரானது எனவே அப்படிப்பட்ட பேச்சுக்களை தடை செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள
அது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டில்லியில் நாளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதில் தமிழகத்தின் சார்பில் டி ஆர் பாலு, ஆ. ராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.