இந்தியாவின் அண்டை நாடான பூட்டானுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக தனி விமான மூலம் சென்றடைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இப்பயணத்தின் போது பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நம்யல் வங்ஷிக், பிரதமர் டிஷெரிங் டொப்கெ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லியோன்பா தங்யல் ஆகியோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இச்சந்திப்புகளின் போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் பயணம்
