Skip to content
Home » சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சரண்ராஜ் (19) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளதாகவும். அவரை சரண்ராஜ் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் ஒரு கட்டத்தில் சிறுமியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இருப்பினும் சிறுமி கருத்து வேறுபாடு காரணமாக நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தாலும் சரண்ராஜிடம் இருந்து கடந்த சில மாதங்களாக விலகியே இருந்து வந்து உள்ளார். இது பற்றி சரண்ராஜ் சிறுமியிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சரண்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!