Skip to content
Home » கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காடுவெட்டான்குறிச்சி ஊராட்சியில், 75 – வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபைக் கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி நடராஜன் அவர்கள் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் (வட்டார ஊராட்சி) முன்னிலையில் நடைபெற்றதில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சண்முகம்,ஒன்றியக் குழு உறுப்பினர்

அடைக்கலமேரி ராபர்ட்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் இளங்கோவன்,காடுவெட்டான்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்ற செயலாளர் மா.சகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!