Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அனைக்குடத்தில் இருந்து அமிர்தராயன் கோட்டை செல்லும் பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து வழியே சென்ற பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர். தன்னீரை குடித்த முதியவர் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் இதுகுறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து  இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். முதியவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!