Skip to content
Home » கடையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்-பணம் திருட்டு…பெரம்பலூரில் சம்பவம்..

கடையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்-பணம் திருட்டு…பெரம்பலூரில் சம்பவம்..

பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆனந்தகுமார் என்பவர் புட்டிங் டாக்டர் என்று கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 6.30  மணி அளவில் தனது வீட்டில் இருந்தவாறு மொபைல் மூலம் கடையை கண்காணிக்கும் போது கடை திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதில் நேரில் சென்று பார்த்த உரிமையாளர் கடையின் பூட்டு உடைக்கபட்டு கடையில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் 35 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது.  இது சம்பந்தமாக பெரம்பலூர் காவல்துறை அலுவலகம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார் .விரைந்து வந்த போலீசார் சிசிடி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!