Skip to content
Home » கர்நாடக முதல்வர் பதவி……பரமேஷ்வரும் போட்டியில் குதித்தார்

கர்நாடக முதல்வர் பதவி……பரமேஷ்வரும் போட்டியில் குதித்தார்

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவக்குமார் கடும் போட்டியில் உள்ளனர். இதனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய டில்லியில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.  கடந்த 2 தினங்களாக, டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் ஆதரவாளர்கள் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தங்களது தலைவருக்கான ஆதரவை வெளிப்படுத்தினர். இதில், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள், அவரது உருவம் கொண்ட கொடியை ஏந்தியபடி, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவியை முன்னாள் துணை முதல்-மந்திரியான பரமேஷ்வருக்கு தர வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், காங்கிரசுக்குள் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் துமகூரு நகரில் கோஷங்களை எழுப்பியபடியும், கட்சி கொடி மற்றும் பரமேஷ்வர் உருவம் பொறித்த படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தியபடியும் சாலை வழியே ஊர்வலம் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவிக்கு இருவர் இடையே போட்டிக்கான சூழல் காணப்படும்போது, தற்போது அதில் பரமேஷ்வரும் இணைந்து உள்ளார். எனினும், கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பவே, இந்த விசயத்தில் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!