முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வரும் 7ம் தேதி சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி நடக்கிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்குகிறது. கருணாநிதி நினைவிடம் சென்று அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்த பேரணியில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பல்லாயிரகணக்கில் கலந்து கொள்கிறார்கள்.