கரூர் தொகுதியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. இங்கு பாஜக வேட்பாளரான செந்தில்நாதனின் வேட்புமனுவை ரிசீலித்தபோது அவரது மனுவை நிறுத்திவைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதை அவர் குறிப்பிடவில்லை என கூறினார். எனவே வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக கலெக்டர் தங்கவேலு அறிவித்தார்.அதே நேரத்தில் காங்கிரஸ், அதிமுக, நாதக மனுக்கள் ஏற்கப்பட்டது.