புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கணக்குகளை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர் . திருவிழாவை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும் நிலையில்,
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி கீதம் ரவி தலைமையிலும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையிலும், தேமுதிக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமையிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 31ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.