Skip to content
Home » கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு பல்லடத்தில் அரிவாள் வெட்டு சம்பவத்தை கண்டித்து கரூர் பிரஸ் கிளப் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்… நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு செய்தியாளர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த காவல்துறை இருந்ததாகவும் அதனை கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் பல்வேறு மாவட்டங்களில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!