Skip to content
Home » கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேக விழா

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிசேக விழா

 

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக  விழாவை முன்னிட்டு  ஆலயத்தில் உள்ள நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,  திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகேஸ்வரர் கரியமாலீஸ்வரர் சுவாமிகளுக்கு காய்கறிகள்,பழங்கள் மற்றும் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார்

உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து கற்பூர ஆரத்தி கும்ப ஆரத்தி நட்சத்திர ஆரத்தி மற்றும் மகா

தீபாராதனை நடைபெற்றது

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவை காண கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!