டில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில் ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 8 பேரும் உள்ளனர். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களில் 2 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 2 பேர் சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் டில்லி அரசை எப்படியும் கவிழ்த்து விடவேண்டும் என பாஜக சதி செய்வதாக முதல்வர் குற்றம் சாட்டி வந்தார். இதை தடுக்கவும், அனைத்து எம்.எல்.ஏக்களும் தன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை நாட்டுக்கு நிரூபிக்கவும் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கு கோரும் தீா்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல்வருக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் பங்கேற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் 54 பேரும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறும்போது, தன் மீது எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது/ அனைவரும் எங்களுடன் உள்ளனர். சிலர் சொந்த பணி காரணமாக வரவில்லை என்றார்.