Skip to content
Home » கேரளாவில் இடதுசாரிகளுக்கு 100% வெற்றி வாய்ப்பு….. வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இடதுசாரிகளுக்கு 100% வெற்றி வாய்ப்பு….. வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திருச்சூரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கைச் செலுத்தினார். மேற்கு வங்காள கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்களித்த பின் கேரள முதல்வர்  பினராயி விஜயன் கூறியதாவது:  மத்திய  பாஜக அரசு கேரளாவுக்கு நிதியளிக்க மறுக்கிறது. காங்கிரசும், பாஜகவும் கேரளாவுக்கு எதுவும் செய்யயாது  20 தொகுதிகளிலும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!