Skip to content
Home » கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு….

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் ரயில்வே பாலம் அருகில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் ரயில்வே மேம்பாலம் அருகில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!