Skip to content
Home » கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

  • by Senthil

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவம் இடத்திலேயே இளம் வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.  மற்றொருவர் பயங்கர வெட்டு பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப் பட்டனர். 5 பேர் கொண்ட கும்பல் பலத்த ஆயுதங்களுடன் நீதி மன்ற வளாகம் முன்பு பேக்கரியில் நின்று கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப் பதுள்ளது. வெட்ட ப்பட்ட இருவர் கையிலும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் இருந்துள்ளது . ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பின்னர் தாக்குதல் நடத்திய 5 பேரும் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோர்ட் வளாகத்திலேயே நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!