கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க
திருநங்கையின் உடல் ஆற்றில் அழுகிய நிலையில் இருப்பதை கண்டனர்.
இதனை எடுத்து குளித்தலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த திருநங்கையின் விவரங்கள் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.