பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் அவரது குழுவினர் வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரம்பலூரில் கோபால் கடைவீதியில் சக்கரபாணி மளிகை கடை உரிமையாளர் ,வாலிகண்டாபுரம் பெரம்பலூர் சங்கர் மளிகை கடை உரிமையாளர் சங்கர்(51) கடை வீதி வாலிகண்டாபுரம் பெரம்பலூர் ஆகிய இருவரும் சட்ட விரோதமாக தங்களது மளிகை கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மூட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நிலையம்
அழைத்து வந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்னர். சக்கரபாணியிடம் சுமார் 12990 ரூபாய் மதிப்புள்ள 7.5 கிலோ எடையுள்ள 25 பண்டல் ஹான்ஸ் (ஒரு பண்டல் 15 பாக்கெட்) விமல் பாக்கு 1.764 கிலோ மற்றும் கூல் லீப் 1.474 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சங்கர் மளிகை கடை உரிமையாளரான சங்கரிடமிருந்து சுமார் 6600 ரூபாய் மதிப்புள்ள 6.600 கிலோ எடையுள்ள 22 பண்டல் ஹான்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் மேற்படி இருவரையும் மாவட்ட காவல் கண்காணி்பபாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படியும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன் வழிகாட்டுதலின்படியும் மேற்படி இரண்டு வழக்குகளின் 2 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.