Skip to content
Home » 9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

9ம்வகுப்பு மாணவி கர்ப்பம்…லால்குடி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திண்ணியம் என்ற கிராமத்தை சேர்ந்த கொடியரசன் மகன் வல்லரசன்(22). இவர் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.  வல்லரசன் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மைனர் மாணவியுடன் பழகி வந்தார்.

அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி அவருடன்  உல்லாசம் அனுபவித்தார். இதில்  அந்த மாணவி கர்ப்பம் ஆனார்.  தற்போது மாணவிக்கு 6 மாத கர்ப்பம் ஆனதால் பெற்றோர் கண்டுபிடித்தனர். இது குறித்து மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர், கர்ப்பத்துக்கு காரணம் வல்லரசன் என கூறினர்.

அதன் பேரில் பெற்றோர் லால்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மைனர் பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த  வல்லரசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் லால்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!