சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த உணவு பாதுகாப்புத் துறை, அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும், கேன்டீனில் உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதோடு, அங்குள்ள தேநீர் கடைக்கு ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
