புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
மாயனூர்வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்கு பை ஏற்றி சென்ற லாரி , லோடு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் மாடு வாங்க சென்ற சரவணன், மாரியப்பன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவல் அறிந்து வந்த மாயனூர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.