Skip to content
Home » லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

லாரி -டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….வாலிபர் பலி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் தினகரன் (29). இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் மோட்டார் சைக்கிளில் நேற்று பெரம்பலூர் சென்று விட்டு, பின்னர் மீண்டும் கிருஷ்ணாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி லாரி ஒன்று சென்றது. கிருஷ்ணாபுரம் அரிசி குடோன் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரியும், டூவீலரும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின்

சக்கரத்தில் சிக்கி தினகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். பின்னர் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தினகரனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து தங்கமணி என்ற மனைவியும் அஜய் என்ற ஆறு மாத குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!