Skip to content
Home » சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

சென்னை…..காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து…. வாலிபருக்கு வலை

  • by Senthil

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அந்த பெண் காதலிக்க மறுத்ததால்  அந்த வாலிபர் பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில்  முதலுதவி  அளித்தபின், ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!